
பேசும் பொம்மைகள்
நாவல்
ஆசிரியர் : சுஜாதா
வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
முன்னுரை
குங்குமம் வார இதழில் தொடர்ந்து வந்தபோது இந்தக்
கதையின் ஆதாரக்கருத்தான “டவுன் லோடிங்”
(downloading) என்பதின் சாத்தியத்தைப் பற்றிப் பலர்
என்னிடம் சந்தேகம் கேட்டார்கள். ஒரு மனித மனத்தின்
அத்தனை எண்ணங்களையும் ஓர் இயந்திரத்துக்கு
மாற்றிப் புகட்ட முடியுமா என்று பலர் வியந்து
இது சாத்தியமே இல்லை என்றார்கள்.
இன்றைய விஞ்ஞான ஆராய்ச்சி நிலையில் இது
சாத்தியமில்லைதான். ஆனால் இன்று அமெரிக்கா போன்ற
முன்னேற்ற நாடுகளின் முற்போக்கு ஆராய்ச்சி நிலையங்களில்
’செயற்கை அறிவு’ என்ற இயலின் ஒரு பிரிவாக இத்தகைய
மூளைச் செய்தி மாற்றும் ஆராய்ச்சிகள் செய்து சிறிதளவு
வெற்றி கண்டும் இருக்கிறார்கள். இந்த வெற்றியின்
ஒரு கற்பனை விரிவாக்கம்தான் ‘பேசும் பொம்மைகள்.’
1991க்குப் பிறகு நீண்ட காலம் மறுபதிப்புக்காகக்
காத்திருந்த இந்த நாவலை ஏழிரண்டாண்டுக்காலம்
கழித்துப் படித்தாலும் இதன் சுவாரஸ்யம் குறையாமல்
இருப்பதன் காரணம் இதில் கூறப்பட்டுள்ள மருத்துவ
அறிவியல் சாத்தியங்கள் இன்னும் நடைமுறைக்கு வராததே. சைன்ஸ்ஃபிக்ஷன் என்னும் அறிவியல் புனைகதை
எழுதும்போது இந்த சௌகரியம் முக்கியமானது. விருப்பப்படி
எதிர்காலத்தைத் தேர்ந்தெடுக்கலாம். ஒரேயரு தேவை
அதன் ஆரம்பங்கள் நிகழ் காலத்தில் இருந்தாக வேண்டும்.
இப்புத்தகத்தை சிறப்பாக வெளியிடும்
உயிர்மை பதிப்பகத்தாருக்கு நன்றி.
சுஜாதா
சென்னை
டிசம்பர் 2004
புத்தகத்திலிருந்து . . .
அத்தியாயம் 18
மாயா விளிம்பில் இருந்தாள். அந்த விளிம்பில்
அவளுக்குக் குரல்கள் கேட்டன. கைகால்களை அசைக்க
விருப்பம் இருந்தது. விருப்பம் மட்டும். ஆனால்,
செயல்படுத்த முடியவில்லை, கண் இரப்பைகளும்
ஒத்துழைக்க மறுத்தன. பேச்சுக்குரல் தெளிவாகக்
கேட்க, யாரோ அவளைத் தொட்டதும்தான் கண் திறக்க
முடிந்தது. திறந்ததும் அந்த முகம் தெரிந்தது. ‘மாயா!’ என்று
முகம் அவளைக் கூப்பிட்டுப் புன்னகைத்தது. மேலே
விட்டத்தில் வெளிச்சப் பிரகாசம் கண் கூசியது. தான்
எங்கே, தனக்கு நிகழ்வது என்ன என்பதெல்லாம்
முக்கியமாகப் படவில்லை. படுத்துக்கொண்டு, நிகழ்வதை
எல்லாம் வேறு யாருக்கோ போல வேடிக்கை பார்த்தாள்.
சிரிப்புக்கூட வந்தது. இப்போது அவள் பயம் முழுவதும்
விலகிப்போயிருந்தது. தலைமேல் ஏதோ லேசாகக் கனத்தது.
அதைத் தொட்டுப் பார்க்கலாம் என்றால் கைகள்
படுக்கையுடன் கட்டியிருந்தன. எதிரே ஒரு பச்சைத்
திரையில் அவள் இதயத் துடிப்பின் கீற்றல்கள் எழுதின.
ஒவ்வொரு துடிப்புக்கும் ஒரு கீய்க் கேட்டது.
‘கீய்க் . . . கீய்க் . . . கீய்க்.’
“பல்ஸ் நார்மல். பி.பி. நார்மல் டாக்டர்.”
“ரெடி ஃபர்தி டவுன் லோடு.”
“ரெடி!”
மாயா அப்போதுதான் தன் தலை மேலிருந்து
பற்பல பற்பல இணைப்புகள் அந்த வெளியுலக
மிஷினுக்குச் செல்வதைப் பார்த்தாள். அவள் எண்ணங்களில்
ஓர் இரட்டைத் தனத்தை உணர்ந்தாள். ஒன்று
இதையெல்லாம் பார்த்து அலசும் எண்ணம். மற்றொன்று
அடித்தள எண்ணம். அதில் சம்பந்தா சம்பந்தமில்லாத
விஷயங்கள் தென்பட்டன. மாம்பழ வாசனை,
பள்ளிக்கூடத்தில் நனைத்துக் கொண்டது, ஊதுவத்தி
சுட்டது, பாரதிதாசன் வரிகள், சுனில் தந்த முத்தம்
என்று தொடர்பில்லாமல், ஆனால் ஏதும்
உறுத்தவில்லை. இன்பமாக இருந்தது. தொடையை
யாரோ தடவிவிடுவதுபோல.
“மாயா எப்படி இருக்கே?” பச்சை முகமூடிக்குப்பின்
அந்த முகத்தை அடையாளம் கண்டுகொள்ள
முடிந்தது. சாரங்கபாணி.
“வலிக்குதா?”
“இந்தப் பரிசோதனை இன்னும் ஓர் அஞ்சு
நிமிஷம், அதுக்கப்புறம் சில கேள்விகள்.
அதுக்கப்புறம் ரெஸ்ட். தூக்கம். அத்தனை பயந்தியே,
ஏதாவது ஆச்சா? ஏதாவது வலித்ததா?
ஏதாவது தொந்தரவா?”
“டாக்டர்! ப்ராஸஸ் இனிஷியேட்டட்!”
சாரங்கபாணி, “லெட் மி ஸி லெட் மி ஸி”
என்று திரையைப் பார்த்தார்.
அதில் எழுத்துகளுக்கு அருகில் இரு பிம்பங்கள்
தெரிந்தன. அவை பாதிபாதியாக, கலர் கலராக
இருந்தன. பிம்பத்துக்கு உயிர் இருப்பதுபோல்
சலனம் ஏற்பட்டது.
“டெக்ஸா மெத்தஸோன் கொடுத்தீங்களா
விஜி?”
“காலைல கொடுத்தோம் டாக்டர். ப்ளாஸ்மா
கார்ட்டிஸால் அளவு நாலு மைக்ரோ கிராம்.”
“நார்மல்தானே!”
“ஆமாம்.”
“எம்.ஆர்.ஐ.”
“நார்மல் லீஷன் எதும் இல்லை.”
“அப்ப ஆரம்பிக்கலாம்.”
“தாராளமா!”
மாயா தன் மனசில் மண்டையில் எங்கோ வண்ணப்
பொறித் தீற்றல்களை உணர்ந்தாள். ‘விர்ர்ர்’ என்று
தேனீபோல் மெஷின் சப்தம் உள்ளுக்குள் கேட்டது.
“சுனில், சுனில், இன்னும் கிட்ட வா சுனில்.”
“இதுக்கு மேல வர முடியாது, மாயா!”
“இன்னும் கிட்ட, இன்னும் கிட்ட.”
வெல்வெட் இருட்டில் ஜெல்லி தடவி அதில்
வழுக்கினாள். இடுப்பில் வலித்தது. மார்பின்
நுனிகளில் ஐஸ் தொட்டாற்போல உடல்
முழுவதும் வெவ்வேறு உஷ்ணப் பிரதேசங்களாக. . .
யாரும் இல்லை. யார் என்னைத் தொடுகிறார்கள்
என்பதுடன் ரயில் பாலத்தில் கடக்கும் சப்தம்
கேட்டது. மலைப்பாதையில் பூச்சிகளின் தொடர்ந்த
சப்தமும், மருந்து வாசனையும் கேட்டது.
முழுங்கு, முழுங்கு என்று அம்மா தலையில்
தட்டினாள். அப்பா அவள் கையைப் பிடித்து
சிலேட்டில் எழுத, மேனகாவுடன் நாடாக்கட்டிலை
நிற்க வைத்து இடைவெளியில் ஒளிந்துகொண்டு
ஒருவரையருவர் தொட்டுக்கொண்டு ரகசியம்
பேசினார்கள்.
“ப்யூட்டிஃபுல், ப்யூட்டிஃபுல்” என்றார்
சாரங்கபாணி திரையைப் பார்த்து.
“மாயா! பேர் சொல்லு.”
“நர்மதா.”
சாரங்கபாணி விஜியைப் பெருமையுடன்
பார்த்து, “கவனிச்சியா”
“நர்மதா, உன் வயசென்ன?”
“முப்பது.”
“எந்த ஊர்?”
மாயா தன் நினைவுகளில் தேடித்தேடி,
‘விஜயவாடா’ என்றாள்.“இட் ஒர்க்ஸ்” என்றான்
விஜி, ஆச்சரியத்துடன்.“இரு இரு, இப்பத்தானே
ஆரம்பம். ஸிக்ஸ்டி ஃபோர் கே தானே
ட்ரான்ஸ்பர் ஆகியிருக்கு. லிமாயி, இஸ்
ஷி ஓகே ஃபர் அனதர் ஸெஷன்?”
“நாட் நௌ சாரு! லெட்ஸ் டூ இட் டுமாரோ!”
“டூ இட் நௌ!”
லிமாயி பிடிவாதமாக, “சாரு, இப்போது வேண்டாம்.
பல்ஸ் விழுகிறது. கொஞ்சம் ரியாக்ஷன் தெரிகிறது
உடம்பில்.”
“கமான் லிமாயி. இது சாதாரணமான ரியாக்ஷன்!”
“சாரு, இவள் அக்காவுக்கு நிகழ்ந்தது இவளுக்கும்
நிகழ வேண்டுமா!”
சாரங்கபாணி உடனே மௌனமாகி, “ஆல்ரைட்,
நாளைக்குப் பார்த்துக்கொள்ளலாம்!” என்றார்.
விஜி ஏமாற்றத்துடன் “இன்றைக்கு இவ்வளவுதானா!”
“ஆம். இந்த இடத்தில் எச்சரிக்கை ஆசாமிகள், லிமாயி
போன்ற ஆசாமிகளின் கொட்டம் அதிகமாகிவிட்டது.”
“சாரு பேஷன்ஸ் சாரு, அவசரப்படாதே!”
“நான் முடிப்பதற்குள் ஆஸ்திரேலியன் நோபல் பரிசு
வாங்கி விடுவான்.”
மாயா இதையெல்லாம் அசுவாரஸ்யமாகத்தான்
கேட்டுக் கொண்டிருந்தாள். அவள் மனத்துக்குள் அந்த
வேளையில் பலவிதக் குழப்ப எண்ணங்கள் உலவின.
ஒரு மூலை என் பெயர் நர்மதா என்றது. மற்றொரு
மூலை நான் மாயா என்றது. ஒரு மூலையில்
தெலுங்கு வாக்கியங்கள் ஒலித்தன. மெல்ல மெல்ல
கற்பூரம்போல அந்த எண்ணங்கள் கரைந்து
சமநிலை ஏற்பட . . .
“நர்மதா?”
மௌனம்!
“நர்மதா!”
ம்ஹ¨ம்.
“மாயா?”
“ம்!”
“வாலட்டைல் தற்காலிக ஞாபகத்தைத்தான்
அடைய முடிகிறது” என்றார் சாரங்கபாணி.
மாயா வீட்டுக்கு வரவில்லை. அம்மாவும் அப்பாவும்
எட்டரை மணிக்கப்புறம் கவலைப்பட ஆரம்பித்தார்கள்.
“ஏன் வரலை இன்னும்?”
“அதான் தெரியலையே. இன்னிக்குத்தானே
ஆபீஸ்ல கடைசி நாள். அதனால எல்லா சம்பள
பாக்கியும் வாங்கிண்டு வர நாழியாறதோ என்னவோ?”
“எட்டரை மணிவரையா?”
“இரு இரு. ஏதாவது போன் பண்ணுவா.
சினேகிதிகளோட சினிமா கினிமா பார்க்கப்
போயிருக்கலாம்.”
“நீங்க வேணா போய் விசாரிச்சுட்டு . . .”
“ஒம்பது வரைக்கும் பார்க்கலாம். அதுக்கப்புறம்
கிளம்பறேன். எப்பப் பார்த்தாலும் உன் பெண்களால
கவலை, கவலை, கவலை.”
ஒன்பது மணிக்கு மாடி வீட்டில் அப்பாவுக்கு
போன் வந்திருப்பதாகத் தகவல் வந்து சொல்ல
அப்பா அங்கே சென்றார்.
“அப்பா, நான்தான் மாயா பேசறேன்.”
“மாயா எங்க இருக்கே? என்ன ஆச்சு?”
“ஆபீஸ்ல கொஞ்சம் லேட் ஆய்டுத்துப்பா.”
“ஏன் உன் குரல் என்னவோ மாதிரி இருக்கு?”
“அது வந்து தொண்டை கொஞ்சம் கம்மிருக்கு. . .
அப்பா! நான் எதுக்கு போன் பண்ணேன்னா, எனக்கு
ராத்திரி வீட்டுக்கு வர முடியாது. இங்கேயே நைட்
ட்யூட்டி போட்டிருக்கா. ஒரு முக்கியமான
ரிப்போர்ட்டை முடிக்கும்படியா டாக்டர் நரேந்திரநாத்
சொல்லியிருக்கார். அதனால இங்கேயே
டார்மிட்டரியில படுத்திருந்துட்டு
நாளைக்குக் காலைல, அல்லது சாயங்காலம்
வந்துருவேன். அம்மாகிட்ட சொல்லிடறியா?”
“மாயா! ஆர்யு ஆல்ரைட்?”
“ஐ’ம் ஆல்ரைட். கவலைப்படப் போறீங்களேன்னு
தான போன் செய்தேன். வெச்சுரவா?”
“சரி” என்றார் தயக்கத்துடன்.
போன் விடுபட்டதும், சாரங்கபாணி அந்தப் பெண்ணைப்
பார்த்து, “இன்னும் கொஞ்சம் ஃபீலிங்கோட
பேசணும் பெண்ணே” என்றார்.
“அந்தப் பெண் குரல் இன்னும் அட்ஜஸ்ட்
பண்ணணும்போல இருக்கு ஸார். சந்தேகப்படறார்.”
“கொஞ்சம் அக்காரிதம் மாத்திடறேன். அதைப்
பத்திக் கவலைப்படாதே. இப்ப என்ன, இனி
ராத்திரிக்குக் கவலைப்பட மாட்டாங்களே!”
“மாட்டாங்க ஸார்.”“சபாஷ்” என்று
தன் பையிலிருந்து சாரங்கபாணி ஒரு சாக்லேட்
எடுத்து அந்தப் பெண்ணிடம் கொடுத்தார். மாயா,
மேனகா . . . எத்தனைப் பேச்சுப் பேசுவே நீ!”
“எல்லாம் சாக்லேட் கொடுத்தா சரி” என்று
அவள் அந்தச் சாக்லேட்டைத் தன் உதடுகளில்
செருகிக் கன்னத்தை சூப்பிக்கொண்டு ஆர்வத்துடன்
இழுத்தாள். “இதுபோல உண்டா!” என்றாள்.
“எப்பவாவது உன் மார்ல இருக்கற மச்சத்தைக்
காட்டணும் மோகி நீ.”
“இப்பவே டாக்டர்.”
“வேண்டாம். எனக்கு வேற வேலை இருக்கு.”
“இதைவிட முக்கிய வேலையா?”
“ஆமா. நோபல் பரிசு!”சாரங்கபாணி, அந்த இடத்தை
விட்டு விலக அந்தப் பெண் மோகினி, ஸ்விட்ச்
போர்டில் தெரிந்த விளக்குகளை ஆராய்ந்து மெலிய
நளின விரல்களில் பட்டனைத் தட்டி, “டாக்டர் சாரங்க
பாணிஸ் ஆஃபீஸ்!” என்றாள்.
மாயாவின் அப்பா மனைவியைப் பார்த்து,
“அவகூட முதல்லே இப்படித்தான் ஆரம்பிச்சா.”
“எவ?”
“அக்கா மேனகா. முதல்ல வேலைப்பளு தலைக்கு
மேல இருக்கு. வீட்டுக்கு வரமாட்டேன்னுதான்
ஆரம்பிச்சா, எனக்கு என்னவோ கவலையா
இருக்கு.”
“கார்த்தாலபோய் அவ நிஜமாவே
வேலைதானான்னு பார்த்துட்டு வந்துருங்கோ.”
“அதான் சரி. ஆனா டாக்டர் நரேந்திரநாத்
கொடுத்த வேலைன்னா . . . அவர் நல்லவர்.
எசகு பிசகா எதும் நடக்காதுதானே?”
சுனில் பிட்ஸ்பர்க்கிலிருந்து விலகிச் சென்று
கொண்டிருந்தான். வலப் பக்க ஓட்டலும், நெடுஞ்சாலை
அடையாளங்களும் அவனுக்குப் பழகிவிட்டன.
அமெரிக்காவில் அவனுக்கு கார் தேவையாகத்தான்
இருந்தது. நானூறு டாலரிலிருந்து,
நாற்பதாயிரம் டாலர் வரை கார் கிடைக்கிறது.
சம்மதம் என்று சொல்லிவிட்டால் போதும்,
சாஸ்திரத்துக்கு ஒரு அட்வான்ஸ் கொடுத்து
விட்டு, மற்றதைத் தவணையாகக் கட்டிக்கொள்ளலாம்.
தேசமே தவணைமுறையில் இயங்குகிறது. தன்
நண்பனின் காரில் ப்ரொபஸர் பெர்னார்டு
என்பவரைப் பார்க்கச் சென்றுகொண்டிருந்தான்.
சாலையோரத்து மரங்கள், இலைகளின் நிறம்
பச்சையிலிருந்து துரு நிறத்துக்கு, மாறத்
தொடங்கியிருந்தன. இன்னும் சில தினங்களில்
எல்லாம் கொட்டிவிடும் என்று சொல்கிறார்கள்.
சுனிலுக்கு அமெரிக்கா வெறுமையாக இருந்தது.
மாயாவின் நினைவுகள் அவன் மனமெங்கும்
பரவியிருக்க, தினம் தினம் அவளை நினைத்தான்.
எத்தனையோ முறை போன் பண்ண முயற்சி செய்தும்
ஆஸ்பத்திரியில் அவள் இல்லை, இல்லை என்று
சொல்லியிருக்கிறார்கள். சுனில் தப்பு செய்து
விட்டான். அவளைக் கல்யாணம் பண்ணிக்கொண்டு
அவளையும் ‘ஸ்டூடண்ட் விசா’வில் அழைத்து
வந்திருக்க வேண்டும். இப்போதுகூட ஆயிரம் டாலர்
இருந்தால் போதும். ஒரு நடை இந்தியா போய்
உடனே மாயாவின் வீட்டுக்குப் போய். . .
மாயா! இப்போது மணி 3 ஆகிறது. சரியாக
மூன்றரைக்குப் புறப்படு என்னுடன் வா.
எதுக்கு சுனில்?
கல்யாணம் பண்ணிக்கொள்ள. மாயா, நீயில்லாமல்
எனக்கு பல் தேய்க்கக்கூட உற்சாகமில்லை.
நீ இல்லாமல் அமெரிக்காவே பொலிவிழந்து
கிடக்கிறது. நீயில்லாமல் டெலிவிஷனில்
நாட்டமில்லை. இங்கே கிடைக்கும் புஷ்டி
உணவுகளில் விருப்பமில்லை. மாயா!
நீதான் சகலமும்!
மாயாவின் நினைப்பில் ‘எக்ஸிட்’டைத்
தவறவிட்டு விட்டு இன்னும் பதினைந்து மைல்
போனப்புறம்தான் வழி திரும்ப முடிந்தது.
ப்ரொபஸர் பெர்னார்டு அவன் படிப்பு
ஜாதகத்தைப் பார்த்தார்.
“எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால்
இதுவரை இந்திய மாணவர்களை ரிஸர்ச்
அஸிஸ்டண்டாக எடுத்துக்கொண்டதில்
எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் ஏமாற்றமே.
ஏறத்தாழ ஒரு சைனீஸ் மாணவனைத்
தேர்ந்தெடுத்துவிட்டேன். அவன் இங்கிலீஷ்தான்
இன்னும் புரியவில்லை. மேலும் உன்
‘பயோடேட்டா’வில் அதிகம் புளுகில்லை.
நான் ப்ரபஸர் இர்விங்குக்கு போன் செய்கிறேன்.
ஆறு மாதம் உனக்குக் கொடுக்குமாறு
சொல்லிவிடுகிறேன் . . .”
சுனிலுக்கு உற்சாக அலைபொங்க . . .
“க்ரேட் ஸார்! தாங்க்யூ ஸார். உங்களுக்கு
எவ்வாறு நன்றி சொல்வது என்றே . . .”
“நன்றி வேண்டாம். ஒழுங்காக ப்ராஜெக்டைப்
பல்கலைக்கழகத்தில் முடித்துக் காட்டினால்
போதும். மாதம் ஆயிரம் டாலர் கிராண்ட்டிலிருந்து
அனுப்பப்படும். வெளியே என் செக்ரட்ரியைச்
சந்தித்தால், மேற்கொண்டு விவரங்கள் தருவாள்.
பெஸ்ட் ஆஃப் லக்.”
ஆயிரம் டாலர்! முன்னூறு டாலர் போதும்
சொந்தச் செலவுக்கு. மற்றதெல்லாம் மிச்சப்படுத்தி
இன்னும் இரண்டு மாதங்களில் மாயாவைச்
சந்திக்க ஓர் அவசர ட்ரிப் போய்விட்டு
வந்துவிடலாம் என்று எண்ணிய அதே சமயம்
மாயாவை அடுத்த கட்டத்திற்குத் தயார்ப்
படுத்த அறை மாற்றினார்கள்.
6 comments:
சுஜாதாவின் உரைநடையிலும் கதை சொல்லும் திறமையிலும் மிகுந்த பிரேமை கொண்டிருந்த நான் இந்த நாவலை சமீபத்தில் முயற்சித்துப் பார்க்கும் போது, தெலுங்கு மசாலா படத்தை விட மோசமாக சகிக்க முடியாமல் இருந்ததை உணர்ந்தேன். வணிக ரீதியாக மிகுந்த சமரசப்படுத்திக் கொண்டு எழுதி ஏமாற்றியிருந்தார் சுஜாதா. இதன் மறுபதிப்பு வராமலே போயிருக்கலாம். ஒரு சுவையான சிறிய கட்டுரை மூலம் இதில் விளக்கப்பட்டிருந்த அறிவியல் சமாச்சாரங்களை அவர் எழுதியிருக்கலாம்.
சுரேஷ் கண்ணன் பார்வையோடு என்னால் ஒத்துப் போக முடிகிறது. இந்தப் புத்தகத்தை, தொடர்கதையாக வந்த காலத்தில், நிச்சயமாக தேடிப் பிடித்துப் படித்திருப்பேன். இப்போது, இந்த அத்தியாயத்தைப் படித்து முடிக்கும் முன்பே ஆயாசமாக இருக்கிறது.
நிச்சயம் நாந்தான் மாறி விட்டேன்.
மற்றபடி உயிர்மையின் இந்தத் தளம் நல்ல முயற்சி.
இவர்தானே புறநானூறுக்கு காமெடி உரை எழுதியவர்?
SUJAATHAA!
EZUTHUVATHILUM PADIPPATHILUM
pozutheellam kazikkum
sathanai manithar!
wwww.islamiaulagam.blogspot.com
Keep up the good work Chevy pick up tire sizes Ford escape ford home loan protonix Bc legal advice Trace mineral supplement Interior design training in nz Medical malpractice coumadin email addresses of mass transmitt 205 Magnetic cabinet locks lesbian teens first experience Ad for zyrtec laws on short term disability insurance discontinued Mature anal redhead panasonic ts3282 dsl patanol optic drops Computer interactive gmp training
Cool blog, interesting information... Keep it UP Buying provigil without a prescription Ultram online doctor game Good internet make marketing money through Legumes toutes les vitamines low blood pressure Battery miniature lights Forex trading online march des change formation forex21 acne help
Post a Comment